அன்புடைமை: திருக்குறள் | Anbudaimai: Thirukural
அன்புடைமை
1. அன்பிற்கும் உண்டோ அடைக்கும்தாழ் ஆர்வலர்
புன்கண்ணீர் பூசல் தரும்.
விளக்கம்: அன்புக்குரியவர்களின் துன்பத்தை பார்த்து நம் கண்களில் கண்ணீராக வெளிப்படுவது அன்பு.
2. அன்பிலார் எல்லாம் தமக்குரியர் அன்புடையார்
என்பும் உரிய பிறர்க்கு.
விளக்கம்: அன்பு இல்லாதவர் எல்லா பொருளும் தனக்குரியது என்று எண்ணுவர். அன்பு உடையவர் பிறர் துன்பம் அடையும்போது தன் உயிரையும் கொடுத்து உதவுவார்.
3. அன்போடு இயைந்த வழக்கு என்ப ஆருயிர்க்கு
என்போடு இயைந்த தொடர்பு.
விளக்கம்: உயிர் கொண்ட உடம்பின் பயன் பிறரிடம் அன்பு செலுத்துவதே. அந்த அன்பை நம் வாழ்வில் வளர்த்துக் கொள்ள வேண்டும்.
4. அன்புஈனும் ஆர்வம் உடமை அது ஈனும்
நண்புஎன்னும் நாடாச் சிறப்பு.
விளக்கம்: அன்பு என்பது பிறரை நண்பராக்க உதவும். அந்த அன்பானது, இந்த உலகத்தையே தன்வயமாக்கும்.
5. அன்புற்று அமர்ந்த வழக்குஎன்ப வையகத்து
இன்புற்றார் எய்தும் சிறப்பு.
விளக்கம்: உலகத்தில் இன்பமும் சிறப்பும் பெற்று ஒருவன் வாழ்வது அன்பின் பயனே ஆகும்.
6. அறத்திற்கே அன்புசார்பு என்ப அறியார்
மறத்திற்கும் அஃதே துணை.
விளக்கம்: அன்பு என்பது பகையை வெல்லவும், நட்பை வளர்க்க வளர்க்கவும் உதவுகிறது.
7. என்பி லதனை வெயில்போலக் காயுமே
அன்பி லதனை அறம்.
விளக்கம்: எலும்பு இல்லாத புழுக்கள் வெயிலில் அழிவதுபோல அன்பு இல்லாதவர்களும் அழிவர்.
8. அன்பகத்து இல்லா உயிர்வாழ்கை வன்பாற்கண்
வற்றல் மரம்தளிர்த் தற்று.
விளக்கம்: பாலை நிலத்தில் வாடிப்போன மரம் தளிர்க்காது. அதுபோல அன்பு இல்லாத மனிதர் வாழ்ந்தும் வாழாதவர்களாக கருதப்படுவர்.
9. புறத்துறுப்பு எல்லாம் எவன் செய்யும் யாக்கை
அகத்துறுப்பு அன்பின் வவர்க்கு.
விளக்கம்: அன்பு இல்லாதவர்களுக்கு மெய். வாய், கண், மூக்கு, செவி ஆகியவை இருந்தும் பயனில்லை என்பதாகும்.
10. அன்பின் வழியது உயர்நிலை அஃதிலார்க்கு
என்புதோல் போர்த்த உடம்பு.
விளக்கம்: அன்பு உடையவரை உயிர் உள்ளவராக கருதுவர், அன்பு இல்லாதவரை பிணமாக
கருதுவர்.
அலகு VII: இலக்கியம், தமிழ் அறிஞர்களும், தமிழ்த்தொண்டும் (15 கேள்விகள்)
திருக்குறள் தொடர்பான செய்திகள் (இருபது அதிகாரங்கள் மட்டும்)
- [ஒழுக்கமுடைமை, பொறையுடைமை, ஊக்கமுடைமை, விருந்தோம்பல், அறன் வலியுறுத்தல், ஈகை, பெரியாரைத் துணைக்கோடல், வினை செயல்வகை, அவையஞ்சாமை, கண்ணோட்டம், அன்புடைமை, கல்வி, நடுநிலைமை, கூடா ஒழுக்கம், கல்லாமை, செங்கோன்மை, பண்புடைமை, நட்பாராய்தல், புறங்கூறாமை, அருளுடைமை – மேற்கோள்கள்].