அன்புடைமை: திருக்குறள் | Anbudaimai: Thirukural


அன்புடைமை

1. அன்பிற்கும் உண்டோ அடைக்கும்தாழ் ஆர்வலர் 

புன்கண்ணீர் பூசல் தரும்.

விளக்கம்: அன்புக்குரியவர்களின் துன்பத்தை பார்த்து நம் கண்களில் கண்ணீராக வெளிப்படுவது அன்பு.


2. அன்பிலார் எல்லாம் தமக்குரியர் அன்புடையார் 

என்பும் உரிய பிறர்க்கு.

விளக்கம்: அன்பு இல்லாதவர் எல்லா பொருளும் தனக்குரியது என்று எண்ணுவர். அன்பு உடையவர் பிறர் துன்பம் அடையும்போது தன் உயிரையும் கொடுத்து உதவுவார்.


3. அன்போடு இயைந்த வழக்கு என்ப ஆருயிர்க்கு

என்போடு இயைந்த தொடர்பு.

விளக்கம்: உயிர் கொண்ட உடம்பின் பயன் பிறரிடம் அன்பு செலுத்துவதே. அந்த அன்பை நம் வாழ்வில் வளர்த்துக் கொள்ள வேண்டும். 


4. அன்புஈனும் ஆர்வம் உடமை அது ஈனும்

நண்புஎன்னும் நாடாச் சிறப்பு.

விளக்கம்: அன்பு என்பது பிறரை நண்பராக்க உதவும். அந்த அன்பானது, இந்த உலகத்தையே தன்வயமாக்கும்.


5. அன்புற்று அமர்ந்த வழக்குஎன்ப வையகத்து

இன்புற்றார் எய்தும் சிறப்பு.

விளக்கம்: உலகத்தில் இன்பமும் சிறப்பும் பெற்று ஒருவன் வாழ்வது அன்பின் பயனே ஆகும். 


6. அறத்திற்கே அன்புசார்பு என்ப அறியார்

மறத்திற்கும் அஃதே துணை.

விளக்கம்: அன்பு என்பது பகையை வெல்லவும், நட்பை வளர்க்க வளர்க்கவும் உதவுகிறது.


7. என்பி லதனை வெயில்போலக் காயுமே

அன்பி லதனை அறம்.

விளக்கம்: எலும்பு இல்லாத புழுக்கள் வெயிலில் அழிவதுபோல அன்பு இல்லாதவர்களும் அழிவர்.


8. அன்பகத்து இல்லா உயிர்வாழ்கை வன்பாற்கண் 

வற்றல் மரம்தளிர்த் தற்று.

விளக்கம்: பாலை நிலத்தில் வாடிப்போன மரம் தளிர்க்காது. அதுபோல அன்பு இல்லாத மனிதர் வாழ்ந்தும் வாழாதவர்களாக கருதப்படுவர்.


9. புறத்துறுப்பு எல்லாம் எவன் செய்யும் யாக்கை

அகத்துறுப்பு அன்பின் வவர்க்கு.

விளக்கம்: அன்பு இல்லாதவர்களுக்கு மெய். வாய், கண், மூக்கு, செவி ஆகியவை இருந்தும் பயனில்லை என்பதாகும்.


10. அன்பின் வழியது உயர்நிலை அஃதிலார்க்கு

என்புதோல் போர்த்த உடம்பு.

விளக்கம்: அன்பு உடையவரை உயிர் உள்ளவராக கருதுவர், அன்பு இல்லாதவரை பிணமாக கருதுவர்.


அலகு VII: இலக்கியம், தமிழ் அறிஞர்களும், தமிழ்த்தொண்டும் (15 கேள்விகள்)

திருக்குறள் தொடர்பான செய்திகள் (இருபது அதிகாரங்கள் மட்டும்)

  • [ஒழுக்கமுடைமை, பொறையுடைமை, ஊக்கமுடைமை, விருந்தோம்பல், அறன் வலியுறுத்தல், ஈகை, பெரியாரைத் துணைக்கோடல், வினை செயல்வகை, அவையஞ்சாமை, கண்ணோட்டம், அன்புடைமை, கல்வி, நடுநிலைமை, கூடா ஒழுக்கம், கல்லாமை, செங்கோன்மை, பண்புடைமை, நட்பாராய்தல், புறங்கூறாமை, அருளுடைமை – மேற்கோள்கள்].


Next Post Previous Post
No Comment
Add Comment
comment url