பெரியாரை துணைக்கோடல்: திருக்குறள் | Periyarai-Thunaikoodal– Patience: Thirukkural

 பெரியாரை துணைக்கோடல்

(நன்னெறியில் செலுத்தும் பேரறிவுடைாரைத் துணையாகக் கொள்ளுதல்)


1. அறனறிந்து மூத்த அறிவுடையார் கேண்மை

திறனறிந்து தேர்ந்து கொளல்.

விளக்கம்: அறிவிலும் ஒழுக்கத்திலும் வயதிலும் பெரியவர்களின் நட்பை ஏற்று கொள்ள வேண்டும்.


2. உற்றுநோய் நீக்கி உறாஅமை முற்காக்கும்

பெற்றியார்ப் பேணிக் கொளல்.

விளக்கம்: தமக்கு வந்த துன்பத்தை நீக்கி துன்பம் வராதவாறு காக்கும் திறமை உடையவரை நட்பாக்கி கொள்ள வேண்டும்.


3. அரியவற்றுள் எல்லாம் அரிதே பெரியாரைப்

பேணித் தமராக் கொளல்.

விளக்கம்: அறிவுமிக்க பெரியோர்களை உறவாக கொள்ள வேண்டும். அதுவே ஒருவன் பெற வேண்டிய பேறுகளுள் அரிய பேறு ஆகும்.


4. தம்மிற் பெரியார் தமரா ஒழுகுதல்

வன்மையுள் எல்லாம் தலை.

விளக்கம்: நம்மை விட பெரியவர்களை நட்பாகி கொள்ள வேண்டும் அதுவே சிறந்த வலிமையாகும்.


5. சூழ்வார்கண் ணாகா ஒழுகலான் மன்னவன்

சூழ்வாரைச் சூழ்ந்து கொளல்.

விளக்கம்: தக்க வழிகளை ஆராய்ந்து கூறும் பெரியோர்களை கண்ணாக கொண்டு நடப்பதால் மன்னனுக்கு அரச பாரம் எளிதாக தோன்றும்.


6. தக்கார் இனத்தனாய் தானொழுக வல்லானைச்

செற்றார் செய்யக்கிடந்த தில்.

விளக்கம்: பெரியவர்களின் துணை கொண்டு நடப்பவர்களை நடப்பவர்களுக்கு பகைவரால் எந்த தீங்கும் வராது.


7. இடிக்குந் துணையாரை ஆள்வாரை யாரே

கெடுக்குந் தகைமை யவர்.

விளக்கம்: தவறுகளை சுட்டிக்காட்டும் பெரியவர்களை துணையாக கொண்டு வாழ்பவர்களை அழிக்க எவரும் இலர்.


8. இடிப்பாரை இல்லாத ஏமரா மன்னன்

கெடுப்பார் இலானுங் கெடும்.

விளக்கம்: தவறுகளை சுட்டிக் காட்டும் பெரியவர்களின் துணையை மதிக்காதவன் பகைவர் இல்லை என்றாலும் தானே அழிந்து விடுவான்.


9. முதலிலார்க்(கு) ஊதிய மில்லை மதலையாம்

சார்பிலார்க் கில்ளை நிலை.

விளக்கம்: முதலீடு இல்லாத வணிகருக்கு எந்த ஊதியமும் இல்லை அதுபோல பெரியோர் துணையில்லாதவர்களுக்கு எந்த நன்மையும் இல்லை.


10. பல்லார் பகைகொளலிற் பத்தடுத்த தீமைத்தே

நல்லார் தொடர்கை விடல்.

விளக்கம்: பெரியவர்களின் நட்பை கைவிடுவது பலரை பகைத்துக் கொள்வதை விட பல மடங்கு தீமை உடையது ஆகும்.


Next Post Previous Post
No Comment
Add Comment
comment url