வேலுநாச்சியார்
-
ஜனவரி 03, 1730
இல் பிறந்தார்.
-
ஆங்கில ஆதிக்கத்தை எதிர்த்து போராடிய
முதல் இந்திய பெண்ணரசி.
-
வீரமங்கை, தென்னிந்தியாவின் ஜான்சிராணி என
சிறப்பிக்கப்படுகிறார்.
-
இராமநாதபுரம் அரசர் செல்லமுத்து சேதுபதியின் மகள்.
-
சிவகங்கை அரசர்
முத்துவடுகநாதரை மணந்தார். மகள் வெள்ளச்சிநாச்சியார்.
-
1772 காளையார் கோவில் போரில் முத்துவடுகநாதர் இறந்த பிறகு, வேலுநாச்சியார்,
வெள்ளச்சி நாச்சியார் இருவரும் எட்டு ஆண்டுகள் விருபாட்சியில்
இருந்தனர்.
-
பாதுகாப்பு வழங்கியவர்கள் - திண்டுக்கல் கோபால நாயக்கர் மற்றும்
ஹைதர் அலி.
-
விருபாட்சியில் ஒரு படையை உருவாக்கி ஹைதர் அலி மற்றும் கோபால
நாயக்கருடன் கூட்டணி அமைத்து 1780 இல் சிவகங்கையை தாக்கி ஆங்கிலேயர் வசமிருந்து கைப்பற்றினார்.
-
வேலுநாச்சியாருக்கு இப்போரில் மருதுபாண்டியர் உதவினர்.
-
வேலுநாச்சியாரின் அமைச்சர் - தாண்டவராயப்பிள்ளை.
-
1780 முதல் 1790 வரை பத்தாண்டுகள் சிவகங்கை ராணியாக ஆட்சி செய்தார்.
-
வேலுநாச்சியார் சிவகங்கை ராணியாக பொறுப்பேற்ற பிறகு பெரிய மருது
படைத்தளபதியாகவும், சின்ன மருது அமைச்சராகவும் நியமிக்கப்பட்டனர்.
-
பெரிய மருது
வளரிபடைக்கும்.
-
சின்னமருது வாள்படைக்கும்
தளபதிகளாக விளங்கினார்.
-
பிற்காலத்தில் ஆங்கிலேயருடன் ஏற்பட்ட உடன்படிக்கையின் படி வேங்கண் பெரிய
உடையத்தேவர் சிவகங்கை அரசரானார்.
-
வேங்கண் பெரிய உடையத்தேவர்
வெள்ளச்சி நாச்சியாரை மணந்தார்.
-
1796 இல் வேலுநாச்சியார் நோயுற்று காலமானார்.
குயிலி
-
வீரத்தாய் என சிறப்பிக்கப்படுகிறார்.
-
வேலுநாச்சியாரின் பெண்கள் படைப்பிரிவிற்கு தலைமையேற்றவர்.
-
உடையாள் என்ற உளவாளி பெண்ணின் நினைவாக வேலுநாச்சியாரின் பெண்கள்
படைப்பிரிவு "உடையாள்" என பெயரிடப்பட்டது.
-
குயிலி பற்றிய தகவல்கள் ஜீவபாரதி என்பவர் எழுதிய வேலுநாச்சியார்
என்ற புதினத்தை அடிப்படையாகக் கொண்டது.
-
வேலுநாச்சியாரின் மெய்காப்பாளராக செயல்பட்டார்.
-
ஆங்கிலேயருக்காக உளவுபார்த்த வெற்றிவேல் என்பவரை குத்திக்கொன்றார்.
-
சிவகங்கையிலிருந்த ஆங்கிலேயரின் ஆயுதக்கிடங்கிற்குள் தன்மேல்
தீயிட்டுக்கொண்டு நுழைந்து அதனை அழித்தார்.
-
உலகின் முதல் தற்கொலைப்படை போராளியாக கருதப்படுகிறார்.
-
1780 இல் இறந்தார்.
History