வலியறிதல் : திருக்குறள் | valiyarithal– and emotionally resonant: Thirukkural

வலியறிதல்


1. வினைவலியுந் தன்வலியு மாற்றான் வழியுந்

துணை வழியுந் தூக்கிச் செயல்.

விளக்கம்: ஒரு செயலை செய்யும் முன் தன் வலிமையையும் பகைவர் வலிமையையும் துணை நிற்பவர் வலிமையையும் ஆராய்ந்து செயல்பட வேண்டும்.


2. ஒல்வ தறிவ தறிந்ததன் கண்தங்கிச்

செல்வார்க்குச் செல்லாத தில்.

விளக்கம்: ஒரு செயலை மேற்கொள்ளும் போது அதைப்பற்றி நன்கு அறிந்து தெரிந்து செயல்படுவதால் அச்செயல் நன்றாக முடியும் என்பது.


3. உடைத்தம் வலியறியார் ஊக்கத்தின் ஊக்கி

இடைக்கண் முர்ந்தார் பலர்.

விளக்கம்: தன்னுடைய பலத்தை அறிந்து செயல்பட வேண்டும் அவ்வாறு செயல்படாமல் தோல்வியடைந்தவர்கள் பலர்.


4. அமைந்தாங் கொழுக்கான் அளவறியான் தன்னை

வியந்தான் விரைந்து கெடும்.

விளக்கம்: எதிரியின் வலிமையை தெரிந்து கொள்ளாமல் தன்னை பெருமை பாராட்டு பவன் விரைவில் கெட்டு அழிவாள்.


5. பிலிப்பெய் சாகாடு மச்சிறு மப்பண்டஞ்

சால மிகுத்துப் பெயின்.

விளக்கம்: மயில் இறகை அளவுக்கு மிகுதியாக வண்டியில் ஏற்றினால் அச்சு முறியும். வலிமிக்கவன் பகைவரிடம் அளவுக்கு மீறி பகை கொண்டால் அழிந்து விடுவான். 


6. நுனிகொம்ப ரேறினா ரஃதிறத் தூக்கி

னுயிர்க்கிறுதி யாகி விடும்.

விளக்கம்: மரத்தின் நுனிக்கொம்பில் ஏற நினைப்பது உயிருக்கே அழிவை உண்டாக்கும். அதுபோல எதிரியை அழிக்க எல்லை மீறி முயற்சி செய்வது அழிவை உண்டாக்கும்.


7. ஆற்றி னளவறிந் தீக அதுபொருள்

போற்றி வழங்கும் நெறி.

விளக்கம்: தன்னிடம் இருக்கும் பொருளை அறிந்து பிறருக்கு உதவ வேண்டும் அதுவே சிறப்பாக வாழ வழி வகுக்கும்.


8. ஆகா றளவிட்டி தானுங் கேடில்லை

போகா றகலாக் கடை.

விளக்கம்: வருவாய் சிறிதாக இருந்தால் செலவை விரிவு படுத்தாமல் குறைந்து செலவு செய்தால் நம் வாழ்வில் எந்தத் தீங்கும் வராது.


9. அளவறிந்து வாழாதான் வாழ்க்கை உளபோல

இல்லாகித் தோன்றக் கெடும்.

விளக்கம்: பொருளின் அளவை அறிந்து வாழ்வதனுடைய வாழ்க்கை எல்லா வளமும் இருப்பது போல அழிந்து விடும்.


10. உளவரை தூக்காத ஒப்புர வாண்மை

வளவறை வல்லைக் கெடும்.

விளக்கம்: தனக்கு உள்ள செல்வத்தின் அளவை ஆராய்ந்து பாராமல் பார்க்காமல் பிறருக்கு உதவுவது செல்வத்தை எல்லாம் விரைவில் அழித்து விடும்.

 

Next Post Previous Post
No Comment
Add Comment
comment url