ஒப்புரவு அறிதல் : திருக்குறள் | Oppuravu-arithal– A powerful and clear: Thirukkural

ஒப்புரவு அறிதல்


1. கைமாறு வேண்டாக் கடப்பாடு மாரிமாட்

டென்னாற்றும் கொல்லோ உலகு.

விளக்கம்: மழை பொழியும் மேகத்திற்கு நாம் கைமாறு செய்வதில்லை. அதுபோல பிறருக்கு உதவி செய்துவிட்டு அவர்களிடம் கைமாறு எதிர்பார்க்கக் கூடாது.


2. தாளாற்றித் தந்த பொருளெல்லாந் தக்கார்க்கு

வேளாண்மை செய்தற் பொருட்டு.

விளக்கம்: ஒருவன் தன்னால் முடிந்த அளவு முயற்சி செய்து சேர்த்த செல்வத்தை தான் மட்டும் அனுபவிக்காமல் பிறருக்கு கொடுத்து உதவ வேண்டும்.


3. புத்தே ளுலகத்து மீண்டும் பெறலரிதே

ஒப்புரவி னல்ல பிற.

விளக்கம்: பிறருக்கு உதவி செய்வது வாழும் ஒப்புரவை போல இவ்வுலகில் வேறு ஒன்றும் இல்லை.


4. ஒத்த தறிவானுயிர் வாழ்வான் மற்றையான்

செத்தாருள் வைக்கப் படும்.

விளக்கம்: பிறருக்கு உதவி செய்து வாழ்பவரை உயிர் உள்ளவராக மதிப்பர் உதவி செய்யாதவரை இறந்த பிணமாக கருதுவர்.


5. ஊருணி நீர்நிறைந் தற்றே உலகவாம்

பேரறி வாளன் திரு.

விளக்கம்: மக்களுக்கு பயன்படும் கிணற்றில் நீர் நிறைந்து இருப்பது போல பிறருக்கு உதவுபவரின் செல்வமும் குறையாது.


6. பயன்மரம் உள்ளூர்ப் பழுத்தற்றாற் செல்வம்

நயனுடை யான்கட்.

விளக்கம்: ஊர் நடுவே இருக்கும் மரத்தின் பழம் எல்லாருக்கும் பயன்படுவது போல உதவி செய்பவரின் செல்வமும் பயன்படும்.


7. மருந்தாகித் தப்பா மரத்தற்றார் செல்வம்

பெருந்தகை யான்கட் படின்.

விளக்கம்: பிறருக்கு உதவி செய்பவனின் செல்வமானது மற்றவருக்கு எல்லா துன்பங்களையும் போக்கும் மருந்து மரமாக பயன்படுகிறது.


8. இடனில் பருவத்தும் ஒப்புரவிற் கொல்கார்

கடனறி காட்சி யவர்.

விளக்கம்: பிறருக்கு உதவி செய்யும் குணம் உடையவர் தன்னிடம் பொருள் இல்லாத வறுமையாக இருந்தாலும் உதவி செய்ய தயங்க மாட்டார்கள்.


9. நயனுடையான் நல்கூர்ந்தா னாதல் செயும்நீர்

செய்யா தமைகலா வாறு.

விளக்கம்: பிறருக்கு உதவும் இயல்பு உடையவர் உணவுப் பொருள் இல்லாத நிலையை வறுமை என்று கருத மாட்டார் பிறருக்கு உதவ முடியாத நிலையை வறுமை என்று கருதி வருந்துவர்.


10. ஒப்புரவி னால்வருங் கேடெனி னஃகொருவன்

விற்றுக்கோள் தக்க துடைத்து.

விளக்கம்: பிறருக்கு உதவுவதால் தன் செல்வம் அழியும் நிலை வந்தாலும் அதை பொருட்படுத்தாமல் தன்னை விற்றாவது பிறருக்கு உதவி செய்பவருக்கு புகழ் கிடைக்கும்.


Next Post Previous Post
No Comment
Add Comment
comment url