காலமறிதல்: திருக்குறள் | Kaalamarithal – The Power of Timely Actions: Thirukkural
காலமறிதல்
(செயலை நிறைவேற்றுவதற்கு ஏற்ற காலத்தை அறிதல்)
1. பகல் வெல்லும் கூகையை காக்கை இகழ்வெல்லும்
வேந்தார்க்கு வேண்டும் பொழுது.
விளக்கம்: காகம் தன்னைவிட வலிமையான கோட்டானை பகலில் வெல்லும், அதுபோல பகைவரை வெல்ல அரசன் காலம் அறிந்து செயல்பட வேண்டும்.
2. பருவத்தோ தொட்ட ஒழுகல் திருவினைத்
தீராமை யார்க்குங் கயிறு.
விளக்கம்: ஒரு செயலை காலம் அறிந்து செய்வதால் செல்வத்தை தம்மை விட்டு நீங்காமல் கட்டி வைக்கும் கயிறாக காலம் உதவுகிறது.
3. அருவினை எந்த உளவோ கருவியாற்
காலம் அறிந்து செயின்.
விளக்கம்: ஒரு செயலை தொடங்க அதற்கான காலமும் கருவியையும் அறிந்து செயல்பட்டால் வெற்றி கிடைக்கும்.
4. ஞாலம் கருதினங் கைகூடும் காலம்
கருதி இடத்தாற் செயின்.
விளக்கம்: காலத்திற்காக காத்திருந்து இடமிருந்து செயல்பட்டால் இவ்வுலகத்தையே வெல்ல முடியும்.
5. காலம் கருதி இருப்பர் கலங்காது
ஞானம் கருது பவர்.
விளக்கம்: இவ்வுலகத்தை ஆள நினைப்பவர் அதற்கான காலம் வரும் வரை காத்திருப்பர்.
6. ஊக்கம் உடையான் ஒடுக்கம் பொருத்தகர்
தாக்கற்குப் பேருந் தகைத்து.
விளக்க: ஊக்கம் உடையவன் காலத்தை எதிர்பார்த்து பொறுமையாக இருப்பது, ஆடு எதிரியை தாக்க பின்வாங்கி சென்று தாக்குவது போல தாக்கி வெற்றி பெறுவான் என்பதே.
7. பொள்ளேன அங்கே புறம்வேரார் காலம்பார்த்
துள்வேர்ப்பர் ஒள்ளி யவர்.
விளக்கம்: அறிவுடையார் தன் பகைவர் தீங்கு செய்தால் உடனே கோபம் கொள்ளாமல் அதை மனதில் வைத்துக் கொண்டு தக்க காலம் வரும் வரை காத்திருப்பர்.
8. செறுநரைக் காணின் சுமக்க இறுவரை
காணின் கிழக்காம் தலை.
விளக்கம்: தமக்கு தீங்கு செய்தவரை பார்க்கும் போது பணிவாக நடந்து கொள்ள வேண்டும் அவர்களுக்கு முடிவு காலம் வரும் போது கெட்டு அழிவார்கள்.
9. எய்தர் கரிய தியைந்தக்கால் அந்நிலையை
செய்தற் கரிய செயல்.
விளக்கம்: செய்தற்கரிய செயலை செய்ய அறிய வாய்ப்பு கிடைக்கும் போதே செய்து முடித்தல் வேண்டும்.
10. கொக்கொக்க கூம்பும் பருவத்து மற்றதன்
குத்தொக்க சீத்த இடத்து.
விளக்கம்: கொக்கு இரைக்கி காத்திருந்து இரை வந்ததும் விரைந்து செயல்படுவது போல நாமும் காத்திருந்து செயல்பட வேண்டும்.