காலமறிதல்: திருக்குறள் | Kaalamarithal – The Power of Timely Actions: Thirukkural

காலமறிதல்

(செயலை நிறைவேற்றுவதற்கு ஏற்ற காலத்தை அறிதல்)


1. பகல் வெல்லும் கூகையை காக்கை இகழ்வெல்லும்

வேந்தார்க்கு வேண்டும் பொழுது.

விளக்கம்: காகம் தன்னைவிட வலிமையான கோட்டானை பகலில் வெல்லும், அதுபோல பகைவரை வெல்ல அரசன் காலம் அறிந்து செயல்பட வேண்டும்.


2. பருவத்தோ தொட்ட ஒழுகல் திருவினைத்

தீராமை யார்க்குங் கயிறு.

விளக்கம்: ஒரு செயலை காலம் அறிந்து செய்வதால் செல்வத்தை தம்மை விட்டு நீங்காமல் கட்டி வைக்கும் கயிறாக காலம் உதவுகிறது.


3. அருவினை எந்த உளவோ கருவியாற்

காலம் அறிந்து செயின்.

விளக்கம்: ஒரு செயலை தொடங்க அதற்கான காலமும் கருவியையும் அறிந்து செயல்பட்டால் வெற்றி கிடைக்கும்.


4. ஞாலம் கருதினங் கைகூடும் காலம்

கருதி இடத்தாற் செயின்.

விளக்கம்: காலத்திற்காக காத்திருந்து இடமிருந்து செயல்பட்டால் இவ்வுலகத்தையே வெல்ல முடியும்.


5. காலம் கருதி இருப்பர் கலங்காது

ஞானம் கருது பவர்.

விளக்கம்: இவ்வுலகத்தை ஆள நினைப்பவர் அதற்கான காலம் வரும் வரை காத்திருப்பர்.


6. ஊக்கம் உடையான் ஒடுக்கம் பொருத்தகர்

தாக்கற்குப் பேருந் தகைத்து.

விளக்க: ஊக்கம் உடையவன் காலத்தை எதிர்பார்த்து பொறுமையாக இருப்பது, ஆடு எதிரியை தாக்க பின்வாங்கி சென்று தாக்குவது போல தாக்கி வெற்றி பெறுவான் என்பதே.


7. பொள்ளேன அங்கே புறம்வேரார் காலம்பார்த்

துள்வேர்ப்பர் ஒள்ளி யவர்.

விளக்கம்: அறிவுடையார் தன் பகைவர் தீங்கு செய்தால் உடனே கோபம் கொள்ளாமல் அதை மனதில் வைத்துக் கொண்டு தக்க காலம் வரும் வரை காத்திருப்பர்.


8. செறுநரைக் காணின் சுமக்க இறுவரை

காணின் கிழக்காம் தலை.

விளக்கம்: தமக்கு தீங்கு செய்தவரை பார்க்கும் போது பணிவாக நடந்து கொள்ள வேண்டும் அவர்களுக்கு முடிவு காலம் வரும் போது கெட்டு அழிவார்கள். 


9. எய்தர் கரிய தியைந்தக்கால் அந்நிலையை

செய்தற் கரிய செயல்.

விளக்கம்: செய்தற்கரிய செயலை செய்ய அறிய வாய்ப்பு கிடைக்கும் போதே செய்து முடித்தல் வேண்டும்.


10. கொக்கொக்க கூம்பும் பருவத்து மற்றதன்

குத்தொக்க சீத்த இடத்து.

விளக்கம்: கொக்கு இரைக்கி காத்திருந்து இரை வந்ததும் விரைந்து செயல்படுவது போல நாமும் காத்திருந்து செயல்பட வேண்டும்.

Next Post Previous Post
No Comment
Add Comment
comment url