நட்பு : திருக்குறள் | Natpu – The Meaning and Beauty of True Friendship: Thirukkural

நட்பு 


1. செயற்கரிய யாவுள நட்பின் அதுபோல்

வினைக்கரிய யாவுள காப்பு.

விளக்கம்: நட்பை கொண்டு செய்கின்ற செயலுக்கு சிறந்த பாதுகாப்பு உண்டு.


2. நிறைநீர நீரவர் கேண்மை பிறைமதிப்

பின்நீர் பேதையார் நட்பு.

விளக்கம்: அறிவுடையவர்களின் நட்பு வளர்பிறை போல வளர்ந்து கொண்டு போகும். அறிவு இல்லாதவர்கள் நட்பு தேய்பிறை போல தேய்ந்து கொண்டு போகும்.


3. நவில்தொறும் நூல்நயம் போலும் பயில்தொறும்

பண்புடை யாளர் தொடர்பு.

விளக்கம்: நல்ல நூல்களை கற்க கற்க இன்பம் தரும், அதுபோல பண்புடையவரோடு பழகப் பழக இன்பம் தரும்.

 

4. நகுதல் பொருட்டன்று நட்டல் மிகுதிக்கண்

மேற்சென்று இடித்தற் பொருட்டு.

விளக்கம்: நட்பு என்பது பேசி சிரிப்பதற்கு மட்டுமல்ல, மற்றவர்கள் செய்யும் தவறுகளை கூறி அவர்களை திருத்தவும் நட்பு உதவும்.


5. புணர்ச்சி பழகுதல் வேண்டா உணர்ச்சிதான்

நட்பாங் கிழமை தரும்.

விளக்கம்: ஒருவரோடு ஒருவர் பேசி பழகுவது நட்பு ஆகாது, அவர்களோடு ஒத்த மணப்பான்மையோடு செயல்படுவதை நட்பு ஆகும்.


6. முகநக நட்பது நட்பன்று நெஞ்சத்து

அகநக நட்பது நட்பு.

விளக்கம்: முகம் மட்டும் மலர்வது நட்பாகாது, உள்ளமும் மலரும் படி அன்பு கொண்டு நடப்பதே நட்பு ஆகும்.


7. அழிவி னவைநீக்கி ஆறுய்த்து அழிவின்கண்

அல்லல் உழைப்பதாம் நட்பு.

விளக்கம்: நண்பன் தீய வழியில் சென்றால் அவனை நல்ல வழியில் நடக்க செய்வதும், அவனுக்கு ஒரு துன்பம் என்றால் தானும் வருவதே நட்பு.


8. உடுக்கை இழந்தவன் கைபோல ஆங்கே

இடுக்கண் களைவதாம் நட்பு.

விளக்கம்: நண்பனுக்கு துன்பம் ஏற்பட்டால் அதை நீக்கி அவனுக்கு உதவி செய்வதே உண்மையான நட்பாகும்.


9. நட்பிற்கு வீற்றிருக்கை யாதெனின் கொட்பின்றி

ஒல்லும்வாய் ஊன்றும் நிலை.

விளக்கம்: எந்த ஒரு எதிர்பார்ப்பும் இன்றி நண்பனுக்கு உதவி செய்து தாங்குவது சிறந்த நட்பாகும்.


10. இனையர் இவர்எமக்கு இன்னம்யாம் என்று

புனையினும் புல்லென்னும் நட்பு.

விளக்கம்: இவர் எனக்கு இத்தன்மையானவர் நாம் அவருக்கு இவருக்கு இத்தன்மையானவர் என்று ஒருவரை ஒருவர் புகழ்ந்து பேசுவதால் நட்பு தன் சிறப்பை இழந்து விடும். 

Next Post Previous Post
No Comment
Add Comment
comment url