நட்பு : திருக்குறள் | Natpu – The Meaning and Beauty of True Friendship: Thirukkural
நட்பு
1. செயற்கரிய யாவுள நட்பின் அதுபோல்
வினைக்கரிய யாவுள காப்பு.
விளக்கம்: நட்பை கொண்டு செய்கின்ற செயலுக்கு சிறந்த பாதுகாப்பு உண்டு.
2. நிறைநீர நீரவர் கேண்மை பிறைமதிப்
பின்நீர் பேதையார் நட்பு.
விளக்கம்: அறிவுடையவர்களின் நட்பு வளர்பிறை போல வளர்ந்து கொண்டு போகும். அறிவு இல்லாதவர்கள் நட்பு தேய்பிறை போல தேய்ந்து கொண்டு போகும்.
3. நவில்தொறும் நூல்நயம் போலும் பயில்தொறும்
பண்புடை யாளர் தொடர்பு.
விளக்கம்: நல்ல நூல்களை கற்க கற்க இன்பம் தரும், அதுபோல பண்புடையவரோடு பழகப் பழக இன்பம் தரும்.
4. நகுதல் பொருட்டன்று நட்டல் மிகுதிக்கண்
மேற்சென்று இடித்தற் பொருட்டு.
விளக்கம்: நட்பு என்பது பேசி சிரிப்பதற்கு மட்டுமல்ல, மற்றவர்கள் செய்யும் தவறுகளை கூறி அவர்களை திருத்தவும் நட்பு உதவும்.
5. புணர்ச்சி பழகுதல் வேண்டா உணர்ச்சிதான்
நட்பாங் கிழமை தரும்.
விளக்கம்: ஒருவரோடு ஒருவர் பேசி பழகுவது நட்பு ஆகாது, அவர்களோடு ஒத்த மணப்பான்மையோடு செயல்படுவதை நட்பு ஆகும்.
6. முகநக நட்பது நட்பன்று நெஞ்சத்து
அகநக நட்பது நட்பு.
விளக்கம்: முகம் மட்டும் மலர்வது நட்பாகாது, உள்ளமும் மலரும் படி அன்பு கொண்டு நடப்பதே நட்பு ஆகும்.
7. அழிவி னவைநீக்கி ஆறுய்த்து அழிவின்கண்
அல்லல் உழைப்பதாம் நட்பு.
விளக்கம்: நண்பன் தீய வழியில் சென்றால் அவனை நல்ல வழியில் நடக்க செய்வதும், அவனுக்கு ஒரு துன்பம் என்றால் தானும் வருவதே நட்பு.
8. உடுக்கை இழந்தவன் கைபோல ஆங்கே
இடுக்கண் களைவதாம் நட்பு.
விளக்கம்: நண்பனுக்கு துன்பம் ஏற்பட்டால் அதை நீக்கி அவனுக்கு உதவி செய்வதே உண்மையான நட்பாகும்.
9. நட்பிற்கு வீற்றிருக்கை யாதெனின் கொட்பின்றி
ஒல்லும்வாய் ஊன்றும் நிலை.
விளக்கம்: எந்த ஒரு எதிர்பார்ப்பும் இன்றி நண்பனுக்கு உதவி செய்து தாங்குவது சிறந்த நட்பாகும்.
10. இனையர் இவர்எமக்கு இன்னம்யாம் என்று
புனையினும் புல்லென்னும் நட்பு.
விளக்கம்: இவர் எனக்கு இத்தன்மையானவர் நாம் அவருக்கு இவருக்கு இத்தன்மையானவர் என்று ஒருவரை ஒருவர் புகழ்ந்து பேசுவதால் நட்பு தன் சிறப்பை இழந்து விடும்.