கேள்வி: திருக்குறள் | Questioning: Thirukkural

கேள்வி

(சான்றோர் உரைகளை கேட்டல்) 


1. செல்வத்துள் செல்வம் செவிச்செல்வம் அச்செல்வம்

செல்வத்துள் எல்லாம் தலை.

விளக்கம்: செல்வங்களும் சிறப்பான செல்வம் கேள்விச் செல்வமாகும், அதுவே எல்லா செல்வத்தை விடவும் சிறந்த செல்வமாகும்.


2. செவிக்குணவு இல்லாத போழ்து சிறிது

 வயிற்றுக்கும் ஈயப் படும்.

விளக்கம்: வயிற்றுப் பசியை போக்க உணவு தேவை, அதுபோல் அறிவு என்னும் பசியை போக்க கேள்வி என்னும் உணவு தேவை.


3. செவியுணவின் கேள்வி உடையார் அவியுணவின்

ஆன்றாரோ டொப்பர் நிலத்து.

விளக்கம்: செவி உணவாகிய கேள்வியினை உடையவர்கள் இந்த உலகத்தில் வாழ்ந்தால் அவரை தேவர்களோடு ஒப்பவித்து மதிப்பர்.


4. கற்றிலன் ஆயினும் கேட்க அஃதொருவற்(கு)

ஒற்கத்தின் ஊற்றாந் துணை.

விளக்கம்: நூல்களை கற்கவில்லை என்றாலும் கற்றவர்களிடம் கேட்டு அறிந்து கொள்ள வேண்டும், அது நம் வாழ்வில் தளர்ச்சி வரும்போது சிறந்த துணையாக இருக்கும்.


5. இழுக்கல் உடையுளி ஊற்றுக்கோல் அற்றே

ஒழுக்கம் உடையார்வாய்ச் சொல்.

விளக்கம்: ஒழுக்கம் உடையவர்களின் சொற்கள் வழுக்கள் உடைய நிலத்தில் நடப்போருக்கு ஊன்றுகோல் போல உதவி புரியும்.


6. என்னைத்தானும் நல்லவை கேட்க அனைத்தானும்

ஆன்ற பெருமை தரும்.

விளக்கம்: நல்லலோர் சொல்லும் செய்தி சிறிதளவாக இருந்தாலும், அது அளவுக்கு மீறிய பெருமையைத் தரும்.


7. பிழைத்துணர்ந்தும் பேதமை சொல்லார் இழைத்துணர்ந்(து)

ஈண்டிய கேள்வி யவர்.

விளக்கம்: கேள்வி அறிவு உள்ளவர்கள் ஒன்றை தவறா உணர்ந்தாலும் அறநெறிக்கு மாறாக பேச மாட்டார்கள்.


8. கேட்பினும் கேளாத் தகையவே கேள்வியால் 

தோட்கப் படாத செவி.

விளக்கம்: கேள்வியால் துளையிட்டப்படாத காது கேட்கும் விருப்பம் இல்லையென்றால் செவிட்டு தன்மைக் கொண்டதாக கருதப்படும்.


9.  நுணங்கிய கேள்விய ரல்லார் வணங்கிய 

வாயின ராதல் அரிது.

விளக்கம்: நுட்பமான கருத்துக்களை கேட்டு அறியாதவர் நல்ல சொற்களை பேசுதல் அரிது.


10. செவியின் சுவையுணரா வாயுணர்வின் மாக்கள்

அவியினும் வாழினும் என்.

விளக்கம்: செவியால் உணரக்கூடிய சுவையை உணராது. வாய் சுவையை மட்டும் கொண்டவர்களை மக்கள் என்று கருதமாட்டார்கள். மாக்கள் என்றே கருதுவர்.

Next Post Previous Post
No Comment
Add Comment
comment url