கல்வி : திருக்குறள் | Education: Thirukkural
கல்வி
1. கற்க கசடற கற்ற கற்பவை கற்றபின்
நிற்க அதற்குத் தக.
விளக்கம்: நூல்களை குற்றமற படிக்க வேண்டும், படிப்புக்கு தக்கவாறு நன்னெறியில் நிற்க வேண்டும், கற்கும் முறையில் நடக்க வேண்டும்.
2. எண்என்ப ஏனை எழுத்தென்ப இவ்விரண்டும்
கண்என்ப வாழும் உயிர்க்கு.
விளக்கம்: எண் எனப்படும் கணக்கும், சொல்லும் பொருளும் தரும் இலக்கியமும் மனிதனுக்கு இரு கண் போன்றது.
3. கண்ணுடையார் என்பவர் கற்றோர் முகத்திரண்டு
புண்உடையார் கல்லா தவர்.
விளக்கம்: படித்த அறிவாளிகளே கண்களை உடையவர்கள், படிக்காத அறிவிலிகள் முகத்தில் இரு புண்ணுடையவர்கள்.
4. உவப்பத் தலைக்கூடி உள்ளப் பிரிதல்
அனைத்தே புலவர் தொழில்.
விளக்கம்: புலவர்களுடன் பேசும்போது மகிழ்ச்சியாக இருப்பதும், அவரை விட்டு பிரியும்போது இவரை இனி எப்பொழுது காண்போம் என எண்ணுவதும் புலவர்களின் தொழிலாகும்.
5. உடையார்முன் இல்லார்போல் ஏக்கற்றும் கற்றார்
கடையரே கல்லா தவர்.
விளக்கம்: செல்வவர்கள் முன் ஏழைகள் பணிவாக நடந்து கொள்வது போல, கற்றவர்கள் முன் மக்கள் பணிவாக நடந்து கொள்ள வேண்டும். கல்லாதவர் செல்வம் இருந்தும் இல்லாதவராக கருதப்படுவர்.
6. தொட்ட அனைத்து ஊறும் மணற்கேணி மாந்தர்க்குக்
கற்றனைத்து ஊரும் அறிவு.
விளக்கம்: மணல் நிறைந்த இடத்தில் தோண்ட தோண்ட நல்ல தண்ணீர் கிடைக்கும் அதுபோல நூல்களை கற்க கற்க அறிவு வளரும்.
7. யாதானும் நாடாமல் ஊராமல் என்னொருவன்
சாந்துணையும் கல்லாத வாறு.
விளக்கம்: கல்வி கற்றவனுக்கு எந்த நாடும் தன் நாடாம். எந்த ஊரும் தன் ஊராம். அப்படி இருக்க சிலர் சாகும் வரை கல்வி கற்காமல் இருப்பது ஏன் என தெரியவில்லை.
8. ஒருமைக்கண் தான்கற்ற கல்வி ஒருவருக்கு
எழுமையும் ஏமாப்பு உடைத்து.
விளக்கம்: ஒரு பிறப்பில் படிக்கும் படிப்பு ஏழேழு பிறவிக்கும் உதவும்.
9. தாம்இன் புறுவது உலகுஇன் புறக்கண்டு
காமுறுவர் கற்றறிந் தார்.
விளக்கம்: கல்வியால் உலகம் இன்பமடையும் அதை கண்டு கற்றவர்கள் மேலும் கல்வி கற்க விரும்புவர்.
10. கேடில் விழுச்செல்வம் கல்வி ஒருவருக்கு
மாடல்ல மற்றை எவை.
விளக்கம்: ஒருவனுக்கு அழியாத செல்வம் கல்வி ஆகும் மற்ற செல்வங்கள் எல்லாம் அழிந்து போகும் கல்வியே சிறந்த செல்வமாகும்.