Kavimani Desiga Vinayagam Pillai – 👉 A Legendary Tamil Poet

 ✅ அறிமுகம் :

கவிமணி தேசிய விநாயகம் பிள்ளை தமிழின் புகழ் பெற்ற கவிஞர்களில் ஒருவர். இவர் எழுதிய தமிழ் இலக்கியங்கள், சமுதாயப் பங்களிப்புகள் மற்றும் தேசிய உணர்வை தூண்டும் பாடல்கள், தமிழரின் நல்வாழ்வுக்காகவே , TNPSC தேர்வுகளிலும் முக்கிய இடத்தைப் பெற்றுள்ளன. இக்கட்டுரை, தேர்வர்கள் கவனிக்க வேண்டிய முக்கியமான தகவல்கள் வழங்கப்பட்டுள்ளன.

Kavimani Desiga Vinayagam Pillai

காலம் : 

  • 27.  08. 1876 முதல் 26. 09. 1954 வரை 

ஊர் : 

  • பேரூர்( குமரி மாவட்டம்)

பெற்றோர் :

  • சிவதானுபிள்ளை ஆதிலட்சுமி 

ஆசிரியர் : 

  • சாந்தலிங்க தம்புரான் 

கத்தறிந்த மொழிகள் :

  • தமிழ் மலையாளம் ஆங்கிலம் 

பணி :

  • தொடக்கப்பள்ளி ஆசிரியர் கல்லூரி பேராசிரியர் 

சிறப்பு பெயர் :

  1. கவிமணி (சென்னை மாநில தமிழ்ச் சங்கத்தால் 1940ல் வழங்கப்பட்டது)
  2. வெண்பா இற்றுவதில் வல்லவர் 
  3. சிறந்த குழந்தை கவிஞராக போற்றப்பட்டவர்.


  • பாமரனும் சுவைத்து மகிழக்கூடிய எளிய அழகிய கவிதைகளை இயற்றி புகழ் பெற்றவர் 
  • உமர்கய்யாமின் என்ற பாரசீக கவிஞரின் கவிதைகளை ஆங்கிலத்தில் மொழி பெயர்த்த பிட் ஜெரால்டு என்பவரின் கவிதை வழி தமிழில் அதனை உமர்கய்யாம் பாடல்கள் என மொழிபெயர்த்துள்ளார்.
  • உமர் கையாமின் இயற்பெயர் கியாதுதீன் அபுல் பாத்.
  • ரூபாயத் நான்கடி செய்யுள்.
  • எட்வின் அர்னால்டு எழுதிய "The light of Asia" என்பதனை ஆசிய ஜோதி என்னும் பெயரில் தமிழாக்கம் செய்துள்ளார் புத்தரின் வாழ்க்கை வரலாற்றை கூறும் நூல்.
  • கல்லைப்பிசிந்து கனியாக்கும் செந்தமிழின் சொல்லை மணியாகத் தொடுத்தவனும் நீதானே என்று தாலாட்டு பாடியவர்.
  • மனோன்மணியம் மறுபிறப்பு என்ற திறனாய்வு கட்டுரை எழுதியுள்ளார் 


சிறந்த தொடர்கள் :

  • "தேனிலே ஊறிய செந்தமிழின் சுவைதோறும் சிலப்பதிகாரம்" 
  • "மங்கையராய் பிறப்பதற்கே மாதவம் செய்திட வேண்டுமம்மா"
  • "செந்தமிழ் செல்வத் திருக்குறளை நெஞ்சமே சிந்தனை செய்வாய் தினம்"

  • "நீதி திருக்குறளை நெஞ்சார நம் வாழ்வில் ஓதி தொழுது எழுக ஓர்ந்து"
  • "உள்ளத்தில்  உள்ளது கவிதை இன்ப ஊற்றெடுப்பது கவிதை"

"பாட்டுக்கொரு புலவன் பாரதியோட - அவன் பாட்டை தன்னோடு ஒருவன் பாடினானடா "

"வெயிற்கேற்ற நிழல் உண்டு வீசும் தென்றல் காற்றுண்டு; கையில் கம்பன் கவியுண்டு, கலசம் நிறைய மது உண்டு"

  • "தோட்டத்தில் மேயுது வெள்ளை பசு அங்கு துள்ளி குதிக்குது கன்றுக்குட்டி"
  • "எவர் உடம்பிலும் சிவப்பே ரத்தம் நிறம் அப்பா எவர் விழிக்கும் உவர்பே இயற்கை குணமப்பா"
  • "ஓடும் உதிரத்தில் வழிந்தொழும் கண்ணீரில் தேடிப் பார்த்தாலும் சாதிகள் தெரிவதுண்டோ"
  • "சாலையில் பல தொழில்கள் பெருக வேண்டும் சபைகளிலே தமிழ் எழுத்து முழங்க வேண்டும்"
  • கல்லும் மலையும் குதித்து வந்தேன் - பெரும் காடும் செடியும் கடந்து வந்தேன்.
  • "மீன்கள் கோடி சூழ வெண்ணிலாவே ஒரு வெள்ளியோடம் போல் வரும் வெண்ணிலாவே"
  • "உடலில் உறுதி உடையவரே உலகில் இயற்கை உடையவராம்".


படைப்புகள் :

  1. மலரும் மாலையும் 
  2. நாஞ்சில் நாட்டு மருமக்கள் வழி மான்மியம் (எள்ளல் நூல்).
  3. ஆசிய ஜோதி 
  4. உமர்க்களம் பாடல்கள் 
  5. காந்தளூர் சாலை 
  6. தேவியின் கீர்த்தனைகள் 
  7. இளந்தென்றல் 
  8. பசுவும் கன்றும் 
  9. குழந்தை செல்வம் 
  10. கதர் பிறந்த கதை 

புகழுரை :

"தேசிய விநாயகத்தின் கவி பெருமை - தினமும் கேட்பது என் செவி பெருமை" - நாமக்கல் கவிஞர்.

  • கவிமணியின் கவிதைகளை புரிந்து கொள்வதற்கு பண்டிதராக வேண்டியதில்லை படிக்க தெரிந்த எவரும் பொருள் கொள்ளத் தக்க எளிய நடை - டி. கே. சண்முகம்.


✅ முடிவுரை :

தேசிய விநாயகம் பிள்ளையின் படைப்புகள் தமிழின் பாரம்பரியத்தைத் தழுவியவை. TNPSC தேர்வுகளில் அவரைப் பற்றிய கேள்விகள் வழக்கமாக வருவதால், அவரைப் பற்றிய வாழ்க்கை வரலாறு, இலக்கிய பங்களிப்புகள் ஆகியவற்றை நன்கு அறிந்திருப்பது அவசியம்.


✅ Covered topics :

  • Kavimani Desiga Vinayagam Pillai TNPSC
  • Tamil poet Kavimani biography
  • Desiga Vinayagam Pillai important facts for TNPSC
  • Kavimani works TNPSC notes
  • Famous Tamil poets in TNPSC syllabus
  • Group 2 Tamil literature questions
  • TNPSC Group 4 Tamil writers notes
  • Kavimani awards and titles
  • TNPSC Tamil scholars
  • Desiga Vinayagam Pillai literary contributions

Next Post Previous Post
No Comment
Add Comment
comment url