வினைத்திட்பம் : திருக்குறள் | Vinaithidpam– Steadfastness in Action: Thirukkural
வினைத்திட்பம்
1. வினைத்திட்பம் என்பது ஒருவன் மனத்திட்பம்
மற்றைய எல்லாம் பிற.
விளக்கம்: மனஉறுதி என்பது ஒரு தொழிலை செய்யும் உறுதி ஆகும் வேறு எந்த உறுதியும் சிறந்தது இல்லை.
2. ஊறொரால் உற்றபின் ஒல்காமை இவ்விரண்டின்
ஆறென்பர் ஆய்ந்தவர் கோள்.
விளக்கம்: வரும் முன் காத்தல் வந்தபின் தளராமை ஆகிய இரண்டும் வினைத்திட்பம் பற்றி அறிந்தவர்களின் செயலாகும்.
3. கடைக்கொட்கச் செய்தக்க தாண்மை இடைக்கொட்கின்
ஏற்றா விழுமந் தரும்.
விளக்கம்: ஒரு செயலை செய்து முடிக்கும் வரை வெளியில் தெரியாமல் செய்வது திறமையாகும் வெளிப்பட்டால் திரும்பத் தரும்.
4. சொல்லுதல் யாருக்கும் எளிய அரியவாம்
சொல்லிய வண்ணம் செயல்.
விளக்கம்: ஒரு செயலை இன்னவாறு செய்து முடிக்கலாம் என்று சொல்வது எளியதாகும் அதை போல் செய்து முடிப்பது அரியதாகும்.
5. வீறெய்தி மாண்டார் வினைத்திட்பம் வேந்தன்கண்
ஊறெய்தி உள்ளப் படும்.
விளக்கம்: ஒரு செயலை செய்து பெருமை பெற்றவரின் வினைத்திட்பமானது உலகத்தால் நன்கு மதிக்கப்படும்.
6. எண்ணிய எண்ணியாங் கெய்துப எண்ணியார்
திண்ணியர் ஆகப் பெறின்.
விளக்கம்: ஒரு பொருளைப் பெற எண்ணியவர் அவர் முயற்சி செய்தால் அவர் எண்ணியவற்றை பெற முடியும்.
7. உருவுகண் டெள்ளாமை வேண்டும் உருள்பெருந்தேர்க்
கச்சாணி யன்னார் உடைத்து.
விளக்கம்: பெரிய தேரினை இயக்க உதவும் சிறிய அச்சாணி போல சிறு உடம்பினர்கள் இவ்வுலகத்தில் உண்டு அவர்களை நாம் இகழக் கூடாது.
8. கலங்காது கண்ட வினைக்கண் துளங்காது
தூக்கங் கடிந்து செயல்.
விளக்கம்: மனதில் எண்ணிய செயலை மனம் தளராமல் காலம் தாழ்த்தாமல் செய்து முடிக்க வேண்டும்.
9. துன்பம் உறவறினும் செய்க துணிவாற்றி
இன்பம் பயக்கும் விணை.
விளக்கம்: ஒரு செயலை செய்யும் போது பல துன்பங்கள் வந்தாலும் மனம் தளராது செய்து முடித்தால் அச்செயல் முடிவில் இன்பத்தை தரும்.
10. என்னத்திட்ப மெற்தியக் கண்ணும் வினைத்திட்பம்
வேண்டாரை வேண்டா துலகு.
விளக்கம்: வேறு எந்த உறுதி இருந்தும் செய்யும் செயலில் உறுதி இல்லாதவரை இவ்வுலகம் மதிக்காது.