கண்ணதாசன் - TNPSC தேர்வுக்கான முக்கிய குறிப்புகள் (Kannadasan - Important Notes for TNPSC Exams)

கண்ணதாசன்

கண்ணதாசன் அறிமுகம் (Introduction)

  • பிறப்பு : 24.06.1927
  • ஊர் : சிறுகூடல்பட்டி - சிவகங்கை மாவட்டம்
  • பெற்றோர் : சாத்தப்ப செட்டியார் - விசாலாட்சி ஆச்சி
  • இயற்பெயர் : முத்தையா
  • வளர்ப்பு தாய்: தெய்வாணைஆச்சி
  • வளர்ப்பு தாய் சூட்டிய பெயர் : நாராயணன்

o புனை பெயர்கள்:
  1. காரை முத்து புலவர்
  2. வணங்கா முடி
  3. கமக பிரியன்
  4. துப்பாக்கி
  5. பார்வதி நாதன்
  6. ஆரோக்கிய சாமி


o நடத்திய இதழ்கள் :

  1. திருமகள்
  2. திரைஒளி
  3. மேதாவி 
  4. தென்றல்
  5. திரை
  6. தென்றல் திரை
  7. கண்ணதாசன்
  8. தமிழ் மலர்
  9. சண்டமாருதம்
  10. முல்லை

o பரிசும் பாரட்டும் :
  1. சிறந்த பாடலாசிரியருக்கான தேசிய விருது (1969).
  2. தமிழக அரசின் அரசவைக் கவிஞர் பட்டம் (1978)
  3. அண்ணாமலை அரசர் நினைவு பரிசு (1979)
  4. கவியரசு என்னும் பட்டம் பெற்றார்.
  5. சேரமான் காதலி என்ற புதினத்திற்கு சாகித்திய அகாடமி விருது.
  6. இயற்றமிழ் கவிஞர் என அழைக்கப்பட்டார்.
  7. இருந்து பாடிய இரங்கற்பா பாடியவர்.
  8. சிறுகூடல் பட்டியிலே தோன்றிய பாட்டுப் பறவை.

  • திரைப்பட துறைக்கு அறிமுகப்படுத்தியவர் - இயக்குனர் ராம்நாத்.
  • முதல் திரையிசை பாடல் "கலங்காதிரு மனமே" - படம் : கண்ணியின் காதல் (1949)
  • இறுதி திரையிசை பாடல் "கண்ணே கலைமானே" - படம் : மூன்றாம் பிறை
  • காதல், தத்துவம் பாடுவதில் வல்லவர்.
  • கதை வசனம் எழுதிய முதல் திரைபடம் இல்லற ஜோதி.
  • கங்கை காவிரி திட்டம் குறித்து ஏறத்தாழ 40 ஆண்டுகளுக்கு முன்னரே தெளிவுபடுத்திய கவிஞர்.
  • "கங்கை நதியை திருப்பியிழுத்து காவிரி வரை கொணர்வோம்"
  • பாரதி கண்ட கனவு திட்டமான சேதுகால்வாய் திட்டததை நிறைவேற்ற பாடிய மற்றொரு புதுமைகவிஞர்.
  • பழந்தமிழ் இலக்கியத்தின் உயிர்ச்சாரத்தையெல்லாம் தமது பாடல்களிலே எடுத்தாண்டவர். 
  • தன் திரைப்பட பாடல்களின் வழியே எளியமுறையில் மெய்யியலை மக்களிடையே கொண்டு சேர்த்தவர்.
  • தமிழக அரசின் அரசவைக் கவிஞராகவும் சிறப்பிக்கப்பட்டிருந்தார்.


சிறந்த தொடர்கள்:

  • "சீரிய நெற்றியெங்கே சிவந்த நல்இதழ்கள் எங்கே"
  • "மாற்றம் எனது மானிட தத்துவம்"
  • "நான் நிரந்தரமானவன் அழிவதில்லை எந்த நிலையிலும் எனக்கு மரணமில்லை".
  • "எல்லாரும் எல்லாமும் பெற வேண்டும்- இங்கு இல்லாமை இல்லாத நிலை வேண்டும்".
  • உண்மையைச் சொல்லி நன்மையைச் செய்தால் உலகம் உன்னிடம் மயங்கும்"
  • "செந்தமிழ்ச் சொல் எடுத்து இசை தொடுப்பேன் - வண்ணச் சந்தத்திலலே கவிதைச்சரம் தொடுப்பேன்".
  • "கவிஞன் யானோர் காலக் கணிதம் கருப்படு பொருளை உருப்பட வைப்பேன்"
  • "வாயும் வயிறும், ஆசையில் விழுந்தால் வாழ்க்கை பாலைவனம்"
  • "வாழ்க்கை என்றால் ஆயிரம் இருக்கும்
  • வாசல் தோறும் வேதனை இருக்கும்".
  • "போற்றுபவர் போற்றட்டும் புழுதி வாரித் தூற்றுபவர் தூற்றட்டும் தொடர்ந்து செல்வேன்".
  • "ஆடையின்றி பிறந்தோம் ஆசையின்றி பிறந்தோமா".
  • "சாவே உனக்கொரு நாள் சாவு வந்து சேராதோ" - (நேரு இறந்தபொழுது பாடியது)
  • "நதி வெள்ளம் காய்ந்துவிட்டால் நதிசெய்த குற்றமில்லை விதி செய்த குற்றமின்றி வேறுயாராப்பா"
  • மழைகூட ஒருநாளின் தேனாகலாம், மணல் கூட ஒரு நாளின் பொன்னாகலாம் (14 மொழிகளின் மொழிபெயர்க்கப்பட்ட பாடல்)

படைப்புகள்:

  • அர்த்தமுள்ள இந்துமதம்
  • ஆட்டனத்தி ஆதிமந்தி
  • மாங்கனி
  • தை பவை
  • இயேசு காவியம் ( 5 பாகம், 149 அதிகாரம், 810 விருத்தங்கள், 2346 அகவலடிகள்)
  • தேர் திருவிழா
  • கல்லக்குடி மாகாவியம்
  • சிவகங்கை சீமை
  • வேலங்குடி திருவிழா,
  • ஆயிரம் தீவு
  • அங்கயற்கண்ணி,
  • இராச தண்டனை (கம்பர், அம்பிகாபதி பற்றிய நாடக நூல்)

வாழ்க்கை சரிதம்:
  1. எனது வசந்த காலங்கள்
  2. வனவாசம் (பிறப்பு முதல தி.மு.கவிலிருந்து பிரியும் வரை)
  3. எனது சுயசரிதம் (வனவாசத்தில் விடுபட்ட பகுதி)
  4. மனவாசம் (காங்கிரஸ் கட்சியிலிருந்த காலம்)

மறைவு:
  • அமெரிக்க வாழ் தமிழர்களின் அழைப்பை ஏற்று டெட்ராய்டு நகர் தமிழ் சங்க விழாவில் கலந்து கொண்ட போது உடல்நலக் குறைவு ஏற்பட்டு சிகாகோ நகர மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டவர் சிகிச்சை பலனின்றி 17.10.1981 அன்று மரணமடைந்தார்.
  • Oct-22 ல் சென்னையில் அவரது உடல் தகனம் செய்யப்பட்டது.
  • மணிமண்டம்: சிவகங்கை மாவட்டம் காரைக்குடியில் அமைந்துள்ளது
Next Post Previous Post
No Comment
Add Comment
comment url