இனியவை கூறல்: திருக்குறள் | Iniyavai-kooral– Patience: Thirukkural
இனியவை கூறல்
(இனிமை பயக்கும் சொற்களைப் பேசுதல்)
1. இன்சோலால் ஈரம் அளைஇப் படிறுஇலவாம்
செம்பொருள் கண்டவாய்ச் சொல்.
விளக்கம்: அன்பு நிறைந்து பேசுபவரின் வாய் சொற்கள் வஞ்சனை இல்லாத இருக்கும்.
2. அகனமர்ந்து ஈதலின் நன்றே முகனமர்ந்து
இன்சொலன் ஆகப் பெறின்.
விளக்கம்: ஒருவருக்கு மனம் விரும்பி பொருள்களை கொடுத்து மகிழ்வதைவிட முகம் மலர்ந்து அவர்களிடம் பேசுவது நல்ல மகிழ்ச்சியை தரும்.
3. முகத்தான் அமர்ந்தினிது நோக்கி அகத்தானாம்
இன்சொ லினதே அறம்.
விளக்கம்: தன்னை பார்க்க வருவோரை கண்டவுடன் முகம் மலர்ந்து இனிய சொற்களை பேசுவதே சிறந்த அறமாகும்.
4. துன்புறூஉம் துவ்வாமை இல்லாகும் யார்மாட்டும்
இன்புறூஉம் இன்சொ லவர்க்கு.
விளக்கம்: எல்லாரிடமும் இனிய சொற்களை பேசுவதால் துன்பம் என்னும் வறுமை தம்மை அணுகாது.
5. பணிவுடையன் இன்சொலன் ஆதல் ஒருவற்கு
அணியல்ல மற்றப் பிற.
விளக்கம்: பிறரிடத்தில் பணிவாகவும் இனிய சொற்களை பேசுவதும் உண்மையான அணிகலன்கள் ஆகும் வேறு எந்த அணிகலன்களும் அழகை தராது.
6. அல்லவை தேய அறம்பெருகும் நல்லவை
நாடி இனிய சொலின்.
விளக்கம்: பிறருக்கு நன்மை பயக்கும் இனிய சொற்களை பேசுவது சிறந்த அறம் ஆகும்.
7. நயன்ஈன்று நன்றி பயக்கும் பயன்ஈன்று
பண்பின் தலைப்பிரியாச் சொல்.
விளக்கம்: பிறருக்கு நன்மை பயக்கும் இனிய சொற்களை பேசுவது இன்பத்தை தரும்.
8. சிறுமைய்ள் நீங்கிய இன்சொல் மறுமையும்
இம்மையும் இன்பந் தரும்.
விளக்கம்: பிறருக்கு துன்பம் விளைவிக்கும் சொற்களை பேசாது இனிய சொற்களை பேசுபவனின் வாழ்வு இப்பிறவியிலும் மறுபிறவியிலும் இன்பத்தை கொடுக்கும்.
9. இன்சொல் இனிதீன்றல் காண்பான் எவன்கொலோ
வன்சொல் வழங்கு வது.
விளக்கம்: இனிய சொல் பேசுவது இன்பத்தை தரும் என்று அறிந்தும் பிறரிடம் கடுஞ்சொற்களை பேசுவது தவறான செயலாகும்.
10. இனிய உளவாக இன்னாத கூறல்
கனிஇருப்பக் காய்கவர்ந் தற்று.
விளக்கம்: பிறரிடம் பேசும்போது இனிய சொற்களை பேசாது துன்பம் தரும் கடுஞ்சொற்களை பேசுவது கையில் கனியை வைத்துக்கொண்டு காய்களை உண்பது போன்றது ஆகும்.