பொருள் செயல்வகை: திருக்குறள் | Porul-seyalvagai– Object function: Thirukkural
பொருள் செயல்வகை
(பொருளை ஆக்குவதற்கும் காப்பதற்குமான செயல்முறைகள்)
1. பொருளல் லவரை பொருளாகச் செய்யும்
பொருளல்ல தில்லை பொருள்.
விளக்கம்: எந்த தகுதியும் இல்லாதவரை மதிக்க செய்வது பொருள் என்னும் செல்வமாகும்.
2. இல்லாரை எல்லாரும் எள்ளுவர் செல்வரை
எல்லாரும் செய்வர் சிறப்பு.
விளக்கம்: செல்வம் இல்லாதவரை உலகம் இகழும் செல்வம் உடையவரை புகழ்ந்து பேசும்.
3. பொருளென்னும் பொய்யா விளக்கம் இருளறுக்கும்
எண்ணிய தேய்த்துச் சென்று.
விளக்கம்: செல்வம் என்பது அணையா விளக்கு அது எந்த இடத்திற்கு சென்றாலும் பகைமை எனும் இருளை போக்கும்.
4. அறனினும் இன்பமும் ஈனும் திறனறிந்து
தீதின்றி வந்த பொருள்.
விளக்கம்: பிறருக்கு தீங்கு செய்யாமல் நல்ல வழியில் சேர்த்த செல்வம் அறத்தினையும் இன்பத்தையும் தரும்.
5. அருளோடும் அன்போடும் வாராப் பொருளாக்கம்
புல்லார் புரள விடல்.
விளக்கம்: தவறான வழியில் வந்த செல்வத்தை அனுபவிக்காமல் அழிய விட வேண்டும்.
6. உறுபொருளும் உல்கு பொருளுந்தன் ஒன்னார்த்
தெறுபொருளும் வேந்தன் பொருள்.
விளக்கம்: மக்கள் வரி பொருளும் அரசுரிமையால் அந்த பொருளும் பகைவரை வென்று கொண்ட பொருளும் அரசுக்குரிய பொருளாகும்.
7. அருளென்னும் அன்பீன் குழவி பொருளென்னூஞ்
செல்வச் செவிலியால் உண்டு.
விளக்கம்: அன்பு என்னும் தாய் என்ற அருள் என்னும் குழந்தை பொருள் என்னும் வளர்ப்புத் தாயால் வளர்க்கப்படும்.
8. குன்றேறி யானைப்போர் கண்டற்றால் தன்கைத்தொன்
றுண்டாகச் செய்வான் வினை.
விளக்கம்: தன் கையில் பொருளை வைத்துக் கொண்டு ஒரு செயலை செய்வது மழையின் மேலே ஏறி யானை போரை பார்ப்பது போன்றதாகும்.
9. செய்க பொருளைச் செறுநர் செருக்கறுக்கும்
எஃகதனிற் கூரிய தில்.
விளக்கம்: எதிரியை அழிக்கும் கூர்மையான கருவி செல்வமாகும் செல்வத்தை தேடி சேர்க்க வேண்டும்.
10. ஒண்பொருள் காழ்ப்ப இயற்றியார்க் கெண்பொருள்
ஏனை யிரண்டும் ஒருங்கு.
விளக்கம்: நல்ல வழியில் பொருளை சேர்த்தவருக்கு அறமும் இன்பமும் ஒரு சேர எளிதாக கிடைக்கும்.