சான்றான்மை : திருக்குறள் | Santraanmai– The rise of ethical living: Thirukkural

சான்றான்மை

(பண்புகளால் நிறைந்து நிற்றல்)


1. கடன்என்ப நல்லவை எல்லாம் கடனறிந்து

சான்றாண்மை மேற்கோள் பவர்க்கு.

விளக்கம்: நல்ல குணம் கொண்டவர்கள் நல்ல செயல்களை எல்லாம் தமது கடமை என நினைத்து வாழ்வர்.


2. குணநலம் சான்றோர் நலனே பிறநலம்

எந்நலத் துள்ளதூஉ மன்று.

விளக்கம்: நல்ல குணங்களை கொண்டு இருந்தாலே எல்லா சிறப்பும் வந்து சேரும் வேறு எந்த நலனும் சிறப்பை தராது.


3. அன்புநாண் ஒப்புரவு கண்ணோட்டம் வாய்மையோ(டு)

ஐந்துசால்(பு) ஊன்றிய தூண்.

விளக்கம்: அன்புடைமை நாணம் உதவி செய்தல் இரக்கம் காட்டுதல் உண்மை பேசுதல் போன்ற ஐந்து குணங்களை சான்றான்மையின் தூண்களாகும்.


4. கொல்லா நலத்தது நோன்மைபிறர்திமை

சொல்லா நலத்தது சால்பு.

விளக்கம்: தவம் என்பது பிற உயிர்களை கொள்ளாமை பிறர் குறைகளை சொல்லாமல் சான்றோன்மை எனப்படும்.


5. ஆற்றுவார் ஆற்றல் பணிகள் அதுசான்றோர்

மாற்றாரை மற்றும் படை.

விளக்கம்: ஒரு செயலை வெற்றியுடன் செய்து முடிக்க ஆற்றலும் பணிவாக நடத்தலும் வேண்டும் அதுவே பகைவரை நண்பராக உதவும்.


6. சால்பிற்குக் கட்டளை யாதெனில் தோல்வி

துலையல்லார் கண்ணும் கொளல்.

விளக்கம்: தம்மை விட ஆற்றல் குறைந்தவரிடத்தில் தோல்வி அடைந்தால் அதை ஏற்றுக்கொள்ள வேண்டும் அதுவே ஒருவரின் சான்றான்மையை அறிய உதவும் உறைகள் ஆகும்.


7. இன்னாசெய் தார்க்கும் இனியவை செய்யாக்கால்

என்ன பயத்ததோ சால்பு.

விளக்கம்: நமக்கு தீங்கு செய்தவருக்கு நன்மை செய்ய வேண்டும் அவ்வாறு செய்யாவிட்டால் சான்றான்மை பண்பு இருந்தும் எந்த பயனும் இல்லை.


8. இன்மை ஒருவருக்கு இளிவன்று சால்பென்னும்

திண்மையுண் டாகப் பெரின்.

விளக்கம்: சான்றாண்மை என்னும் பண்பு ஒருவருக்கு இருந்தால் வறுமை அவருக்கு ஒரு குறையாக இருக்காது.


9. ஊழி பெயரினும் தாம்பெயரார் சாண்டான்மைக்(கு)

ஆழி எனப்படு வார்.

விளக்கம்: சான்றான்மை பண்பு கொண்டவர்களை கடல் என்று புகழ்வர் உலகம் அழியும் காலம் வந்தாலும் தன் நிலையிலிருந்து மாற மாட்டார்கள்.


10. சான்றவர் சான்றான்மை குன்றின் இருநிலந்தான்

தாங்காது மன்னோ பொறை.

விளக்கம்: சான்றான்மை பண்பில் குறைவு ஏற்பட்ட அவர்களின் பாரத்தை பூமி தாங்காது.


Next Post Previous Post
No Comment
Add Comment
comment url