அடக்கமுடைமை: திருக்குறள் | Adakkamudaimai – Self-Restraint: Thirukkural
அடக்கமுடைமை
1. அடக்கம் அமரருள் உய்க்கும் அடங்காமை
ஆரிருள் உய்த்து விடும்.
விளக்கம்: அடக்கம் ஒருவனை உயர்ந்த இடத்தில் வைக்கும். அடக்கம் இல்லாதவனை இருள் கொண்ட வாழ்க்கை சூழ்ந்து விடும்.
2. காக்க பொருளா அடக்கத்தை ஆக்கம்
அதனினூஉங் கில்ளை உயிர்க்கு.
விளக்கம்: அடக்கத்தை ஒரு செல்வமாக மதித்து காக்க வேண்டும், அடக்கத்தை உயிரினும் மேலாக கருதுவர்.
3. செறிவறிந்து சீர்மை பயக்கும் அறிவறிந்
தாற்றி னடங்கப் பெறின்.
விளக்கம்: அறிய வேண்டியவற்றை அறிந்து நடப்பதே அறிவுடைமை ஆகும், அவ்வாறு நடந்தால் பாராட்டும் புகழும் கிடைக்கும்.
4. நிலையிற் றிரியாது அடங்கியான் தோற்றம்
மலையினும் மாணப் பெரிது.
விளக்கம்: ஐம்புலன்களை தன் நிலையில் இருந்து மாறுபடாமல் அடக்கி வாழ்பவனுடைய உயர்வு மலையை விட பெரியதாகும்.
5. எல்லார்க்கும் நன்றாம் பணிதல் அவருள்ளும்
செல்வர்க்கே செல்வந் தகைத்து.
விளக்கம்: ஒருவன் எல்லாரையும் பணிந்து நடத்தால் அது அவனுக்கு நன்மை பயக்கும் செல்வத்தை விட மிகப்பெரிய செல்வமாக கருதப்படும்.
6. ஒறுமையுள் ஆமைபோல் ஐந்தடக்க லாற்றின்
எழுமையும் ஏமாப்பு உடைத்து.
விளக்கம்: ஒரு பிறவியில் ஆமையைப் போல் ஐம்புலன்களையும் அடக்கி வாழ்ந்தால், அது அவனுக்கு மறுபிறவியலும் நல்ல பயன் தரும்.
7. யாகாவா ராயினும் நாகாக்க காவாக்கால்
சோகாப்பர் சொல்லிழுக்குப் பட்டு.
விளக்கம்: ஒருவன் தன் நாவை அடக்கி காக்க வேண்டும், அவ்வாறு காக்கா விட்டால் சொகுற்றம் ஏற்பட்டு துன்புறுவர்.
8. ஒன்றானுந் தீச்சொற் பொருட்பய னுண்டாயின்
நன்றாகா தாகி விடும்.
விளக்கம்: ஒருவன் தீய சொற்களால் பிறரை துன்பப்படுத்தினால் அது அவனுக்கு வரும் நன்மையும் தீமையாக முடியும்.
9. தீயினாற் சுட்டபுண் உள்ளாறும் ஆறாதே
நாவினால் சுட்ட வடு.
விளக்கம்: தீயினால் சுட்ட புண் உடம்பில் ஆறிவிடும், ஆனால் நாவினால் பேசுவது மனத்தில் ஆறாத வடுவாக இருக்கும்.
10. கதங்காத்து கற்றடங்க லாற்றுவான் செவ்வி
அறம்பார்க்கும் ஆற்றின் நுழைந்து.
விளக்கம்: யாரிடமும் கோபம் கொள்ளாது அடக்கம் உடையவனாக வாழ்ந்தால், அறக்கடவுள் காலம் பார்த்து காத்திருப்பார்.